மார்ட்டின் தெ போரஸ், தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் லீமா நகரில் 1579ம் ஆண்டு பிறந்தார்.
தனது 13வது வயதில் புனித சுவாமிநாதரது சபையில் சேர்ந்து அன்பு, கீழ்ப்படிதல், தாழ்ச்சி
ஆகிய புண்ணியங்களில் சிறந்து விளங்கினார். சமாதானத்தின் தூதர் என்று அழைக்கப்பட்டார்.
நோயாளிகளைத் தொட்டுக் குணப்படுத்தத் தனிப்பெரும் வரம் பெற்றிருந்தார். இவர் பரவசத்தில்
இருக்கையில் வானதூதர் இவரருகில் இருப்பதை பிற துறவிகள் பார்த்திருக்கிறார்கள்.