2009-11-02 16:23:38

அருட்திரு மைக்கிள் சினோட்டியின் விடுதலைக்கென இருபது இலட்சம் டாலரைக் கேட்டுள்ள கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு பிலிப்பைன்ஸ் தலத்திருச்சபை அடிபணிய மறுத்துள்ளது


நவ.02,2009 பிலிப்பைன்சில் கடத்தப்பட்டுள்ள அயர்லாந்து நாட்டின் 79 வயது அருட்திரு மைக்கிள் சினோட்டியின் விடுதலைக்கென இருபது இலட்சம் டாலரைக் கேட்டுள்ள கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு அடிபணிய மறுத்துள்ளது பிலிப்பைன்ஸ் தலத்திருச்சபை.

இக்குருவின் விடுதலைக்கென எவ்வித பிணையத் தொகையும் வழங்கப்படமாட்டாது, ஏனெனில் அருட்திரு சினோட்டி கூட இப்பணத்தை ஊனமுற்றோரின் நலவாழ்வுக்கும் கல்விக்குமென செலவழிப்பாரேயொழிய தனது விடுதலைக்கென பயன்படுத்திக் கொள்வதை விரும்ப மாட்டார் என்று அவரது கொலும்பன் துறவு சபையின் பிலிப்பைன்ஸ் மாநிலத் தலைவர் குரு பாட்ரிக் டோனோகெ கூறினார்.

எவ்வித பிணையத் தொகையும் வழங்கப்படக் கூடாது என்ற கொலும்பன் துறவு சபை மற்றும் அரசின் உறுதிப்பாட்டிற்கு பிலிப்பைன்ஸ் தலத்திருச்சபையும் தன் ஆதரவை வழங்குவதாக அந்நாட்டு ஆயர் தெயோகிராசியாஸ் இனிகெஸ் கூறினார்







All the contents on this site are copyrighted ©.