2009-10-30 16:13:16

ஹோகிமா ஆயர் முகாலாவின் பணி ஓய்வு விண்ணப்பத்தை திருத்தந்தை ஏற்றுக் கொண்டுள்ளார்


அக்.30,2009 இந்தியாவின் ஹோகிமா மறைமாவட்ட ஆயர் ஜோஸ் முகாலாவின் பணி ஓய்வு விண்ணப்பத்தை, இவ்வெள்ளியன்று, திருச்சபை சட்டம் 401, பிரிவு இரண்டின்படி ஏற்றுக் கொண்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள நாகலாந்து மாநிலத்தின் தலைநகராகிய ஹோகிமா மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1998ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி திருநிலைபடுத்தப்பட்டார் ஆயர் முகாலா

இம்மறைமாவட்டம் 1980ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மியான்மார் எல்லைப்புறத்திலுள்ள இங்கு 16 முக்கிய பழங்குடி இனத்தவர் உள்ளனர். இவர்கள் மொத்தமாக நாகா இனத்தவர் என அழைக்கப்படுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.