1533ம் ஆண்டு ஸ்பெயினில் பிறந்து 23ம் வயதில் திருமணம் புரிந்த அல்போன்ஸ் ரொட்ரிகுவஸ்,
தன் தந்தை, தாய், மனைவி, மகன், மகள் ஆகியோர் இறந்த பின்னர் 50ம் வயதில் இயேசு சபையில்
சேர்ந்தார். அச்சபையின் சகோதரராக 24 ஆண்டுகள் வாயிற்காப்போனாகவே எளிமையான பணிபுரிந்தார்.
இறைவனுடன் ஒன்றிய நிலை, மரியன்னை மீதான பக்தி ஆகியவை இவரிடம் காணப்பட்ட தலைசிறந்த பண்புகளை
இவர் தனது 84ம் வயதில் 1617ல் இறைபதம் சேர்ந்தார். 1888ம் ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்டார்.