2009-10-29 15:27:25

ஊடகங்களின் டிஜிட்டல் உலகத்தில் மனித மாண்புக் கலாச்சாரத்தை திருச்சபை ஊக்குவிக்கின்றது, திருத்தந்தை


அக்.29,2009 ஊடகங்களின் டிஜிட்டல் உலகத்தில் மனித மாண்புக் கலாச்சாரத்தை திருச்சபை ஊக்குவிக்கின்றது என்று, திருப்பீட ஊடகவியல் துறை நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏறத்தாழ அறுபது பிரதிநிதிகளை இவ்வியாழனன்று சந்தித்து உரையாற்றிய போது திருத்தந்தை கூறினார்.

வெகு வேகமாக வளர்ந்து வரும் ஊடகத்துறை, தொடர் தொழிற்நுட்ப பரிணாமத்திற்கு உதவி வரும் வேளை, திருச்சபையும் பல்வேறு ஆசிரிய வெளியீடுகள் மூலம், நவீன மற்றும் பொறுப்புமிக்க தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.

மேய்ப்புப் பணியாளர்கள், இந்தப் புதிய தொழிற்நுட்பங்கள், நற்செய்தி அறிவிப்புக்கு முன்வைக்கும் சவால்களைப் புரிந்தவர்களாய், இவை மனிதனையும் அவனது மாண்பையும் மதிக்கும் ஒரு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான துரித நடவடிக்கைகளில் இறங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.