அக்காலத்தில் ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச்
சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.2 அங்கே நீர்க்கோவை நோயுள்ள
ஒருவர் அவர்முன் இருந்தார்.3 இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து ' ஓய்வுநாளில்
குணப்படுத்துவது முறையா இல்லையா? ' என்று கேட்டார்.4 அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு
அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.5 பிறகு அவர்களை நோக்கி ' உங்களுள்
ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?
' என்று கேட்டார்.6 அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை