திருத்தந்தை தூரின் நகருக்கு செல்வார் - வத்திக்கான் அறிவிப்பு
அக். 28, 2009 அடுத்த ஆண்டு மே மாதம் இயேசுவின் அடக்கத்திற்கு பயன்படுத்தியதாகச் சொல்லப்படும்
துணி வட இத்தாலியின் தூரின் நகரில் விசுவாசிகளின் வணக்கத்திற்கு திறந்து வைக்கப்படும்
என்றும் அந்த நேரத்தில் அங்கு கூடும் ஆயிரமாயிரம் திருப்பயணிகளுடன் திருத்தந்தையும் தூரின்
நகருக்கு செல்வார் என்றும் வத்திக்கானும், தூரின் உயர் மறைமாவட்டமும் அறிவித்துள்ளன.
2002ஆம் ஆண்டு சுத்தம் செய்யப்பட்ட இந்தத் துணி அதன் பிறகு முதன் முறையாக, ஏப்ரல் 10ஆம் தேதி முதல் மே
23ஆம் தேதி வரை விசுவாசிகள் வணக்கத்திற்குத் திறந்து வைக்கப்படுகின்றது. 1534ஆம் ஆண்டு
ஏற்பட்ட ஒரு தீவிபத்தில் பழுதடைந்த இந்தத் துணியில் 35 இடங்களில் பிற துணிகள் சேர்க்கப்பட்டிருந்ததாகவும்,
அவற்றை நீக்கி விட்டு மீண்டும் இந்தத் துணியை துவக்கத்தில் இருந்த நிலைக்கு கொண்டு செல்வதுமே
இந்த சுத்தீகரிப்பின் தலையாயப் பணியாயிருந்தது என்று செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. இந்த
அடக்கத்துணியைக் குறித்த விளக்கங்கள் www.sindone.org என்ற இணையதளத்தில் காணக்கிடப்பதாக
இந்த செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.