அக். 28, 2009 திருத்தந்தை 6ஆம் பவுல் இறந்த 30வது ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை 16ஆம்
பெனெடிக்ட் வருகிற நவம்பர் மாதம் 8ஆம் தேதி, திருத்தந்தை 6ஆம் பவுல் பிறந்த இடமான கொன்செசியோவுக்குத்
திருப்பயணம் மேற்கொள்வார் என வத்திக்கான் அறிவித்துள்ளது. 1963ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் திருத்தந்தையாக
இருந்த 6ஆம் பவுலின் பிறந்த இல்லத்தையும், அவர் திருமுழுக்கு பெற்ற பங்கு கோவிலையும்
பார்வையிடும் திருத்தந்தை, நவம்பர் 8ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் 6ஆம் பவுல் திறந்த
வெளி அரங்கில் திருப்பலியும், மூவேளை ஜெபமும் நிகழ்த்துவார் என்றும், பின்னர் மாலையில் திருத்தந்தை
6ஆம் பவுல் நினைவாக எழுப்பப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தைத் திறந்து வைத்து, அங்கு 6ஆம் பவுல்
அகில உலக விருதுகளை பலருக்கு வழங்குவார் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.