2009-10-27 16:24:27

ஆர்மீனிய அப்போஸ்தலிக்க பிதாப்பிதாவுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


அக். 27, 2009 ஆர்மீனிய அப்போஸ்தலிக்க பிதாப்பிதா இரண்டாம் கரேக்கின் பதவியேற்று பத்து ஆண்டுகள் நிறைவுருவதையொட்டி தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட். கத்தோலிக்கத் திருச்சபைக்கும், ஆர்மீனிய அப்போஸ்தலிக்க கிறிஸ்தவ சபைக்கும் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் பேச்சு வார்த்தைகளுக்கான ஆர்மீனியப் பிதாப்பிதாவின் அற்பணத்தைத் தான் அறிந்திருப்ப தாகவும், வரும் ஆண்டுகளிலும் அது தொடரவேண்டும் என ஆவல் கொள்வதாகவும் தன் வாழ்த்து செய்தியில் கூறியுள்ள பாப்பிறை, பிதாப்பிதா கரேக்கின் மூலம் ஆர்மீனிய அப்போஸ்தலிக்க கிறிஸ்தவ சபைக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.