2009-10-26 16:23:32

பேராயரான Daniel Acharuparambil மறைவு குறித்து அரசுத்தலைவர்களும் திருச்சபைத் தலைவர்களும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்


அக். 26, 2009 கேரளா ஆயர் பேரவையின் தலைவரும் வேரபோலி பெருமறைமாவட்ட பேராயருமான Daniel Acharuparambil இத்திங்களன்று காலை இறைபதம் சேர்ந்தார்.
இப்புதன் பிற்பகல் 3.30 மணிக்கு பேராயரின் அடக்கச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1939 ஆம் ஆண்டு கேரளாவின் பள்ளிப்புரத்தில் பிறந்த பேராயர் கார்மேல் துறவு சபையில் இணைந்து 1966 ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். ரோம் உர்பான் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகள் அதிபகராகவும் செயலாற்றினார்.
பேராயரின் மரணம் குறித்து தன் அனுதாபங்களை வெளியிட்ட கேரளா முதல்வர் V. S. அச்சுதானந்தன், மதங்களிடையேயான இணக்க வாழ்வுக்கு பேராயர் Acharuparambil ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளார். இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் வர்கி விதயாத்தில், சிரோ மலங்கார ரீதி தலைவர் பேராயர் மார் பசிலியோஸ் க்லீமிஸ் உட்பட தலத் திருச்சபைத் தலைவர்களும் தங்கள் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.