2009-10-26 16:20:48

"பிப்ளிகோ" விவிலிய நிறுவனத்தின் பேராசியர்கள், மாணவர்களைச் சந்தித்தார் பாப்பிறை,


அக். 26, 2009 திருச்சபையின் வாழ்விலும், பணியிலும் இறைவார்த்தையின் முக்கியத்துவத்தை அதிகம் அதிகமாக வலியுறுத்திய இரண்டாம் வத்திக்கான் போது அவைக்குப்பின் விவிலியத்தின் மீதான ஆர்வம் மக்களில் பெருகியுள்ளதை அதிகமாகக் காணமுடிகிறது என்றார் பாப்பிறை 16 ஆம் பெனெடிக்ட்.
விவிலியம் குறித்த சிறப்பு படிப்பிற்கென ரோம் நகரில் திருத்தந்தை பத்தாம் பத்திநாதரின் விருப்பத்தின் பேரில் கட்டப்பட்ட இயேசு சபையினரின் "பிப்ளிகோ" (Biblico ) எனும் பாப்பிறை விவிலிய நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி தன்னை வத்திக்கானில் சந்தித்த அந்நிறுவனத்தின் பேராசியர்கள், மற்றும் மாணவர் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய பாப்பிறை, இந்நிறுவனம் இதுவரை 7000 க்கும் மேற்பட்ட விவிலியப் பேராசிரியர்கள், விவிலிய குழுக்கள் என எண்ணற்றோரைத் தயாரித்து அகில உலகத் திருச்சபையின் பணிகளுக்கு வழங்கியுள்ளதென பாராட்டினார்.







All the contents on this site are copyrighted ©.