அக். 26, 2009 இரண்டாம் வத்திக்கான் போதுசங்கத்தின் சில தீர்திருத்தங்களை ஏற்க மறுத்து
பேராயர் மார்செல் லெபெப்ரெயால் உருவாக்கப்பட்ட பத்தாம் பத்திநாதர் அமைப்புக்கும் திருப்பீடத்திற்கும்
இடையேயான முரண்பாடுகளைக் களையும் நோக்குடனான உயர்மட்ட பிரதிநிதிகள் கூட்டம் இத்திங்களன்று திருப்பீடத்தில்
இடம் பெற்றது.
திருச்சபைக்கும் புனித பத்தாம் பத்திநாதர் அமைப்புக்கும் இடையேயான
கோட்பாட்டு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்த இக்கூட்டம், முக்கிய முரண்பாடுகளை அடையாளம் கண்டுள்ளதாகத்
தெரிவிக்கிறது. வரும் மாதங்களில் பெரும்பாலும் மாதத்திற்கு இருமறை கூடி, பாரம்பரிய வழிபாட்டு
முறைகள், இரண்டாம் வத்திக்கான் போதுசங்கத்தின் படிப்பினை விளக்கம், மத விடுதலை ஆகியவை
குறித்து விவாதிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.