2009-10-24 17:41:58

குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு - கிறீஸ்தவ சபைகள் லண்டனில் அமைதி ஊர்வலம்


அக். 24, 2009 பிரிட்டனில் ஒவ்வொரு நாளும் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருவிலேயே கொல்லப் படுவதற்கு எதிர்ப்பையும், அக்குழந்தைகளுக்கான தங்கள் அனுதாபத்தையும் வெளியிடும் வண்ணம் வரும் நவம்பர் 14 ஆம் தேதியன்று அனைத்து கிறீஸ்தவ சபைகளும் இணைந்து லண்டனில் அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தவுள்ளன.
"பிறப்பைக் காணாத குழந்தைகளின் ஐரோப்பிய குரல்" என்ற ஐரோப்பிய கிறீஸ்தவ சபைகளின் அமைப்பால் இச்செப ஊர்வலம் 'வாழ்விற்கான 1000 சிலுவைகள்" என்ற தலைப்பில் இடம் பெற உள்ளது.







All the contents on this site are copyrighted ©.