ஏழ்மை, முன்னேற்றம் குறித்து ஐ.நா. பொதுஅவையில்பேராயர்மிலியோரே
அக். 23, 2009 சமூக சரிநிகரற்ற நிலைகள், மற்றும் அநீதிகளைத் தக்கவைக்கும் சூழல்கள் தொடரும்
வரை, இன்றைய உலகில் ஏழ்மையும் தொடரவே செய்யும் என ஐ.நா. போது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார்
திருப்பீட அதிகாரி பேராயர் செலெஸ்தினோ மிலியோரே. கடந்த ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி
சூழல்களிலிருந்து மீண்டு வருவதாக நம்பிக்கை வார்த்தைகள் வழங்கப்படுகின்ற போதிலும், மிகவும்
பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கான சர்வதேச உதவிகள் குறைக்கப்பட்டு, நம்பிக்கை ஒளிகள்
அகற்றப்பட்டுள்ளன என்ற கவலையையும் பொது அவையில் வெளியிட்டார் பேராயர் மிலியோரே. எழைநாடுகளுக்கான
உதவிகள் குறித்த G8 மற்றும் G20 நாடுகளின் தீர்மானங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்து
விடாமல், செயலளவில் கொணரப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஐ.நா.விற்கான திருப்பீட
அதிகாரி பேராயர் மிலியோரே.