அக். 22, 2009 தற்கொலையினால் இறந்தவரைக் காட்டிலும் அவரைச் சார்ந்திருப்போருக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஆழமானவை என்று
அண்மையில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு விவாதத்தில் பல குருக்களும், துறவியரும் கலந்து
கொண்டு கருத்து தெரிவித்தனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் உடல், மனம் நலம் குன்றியோருக்கான
கத்தோலிக்கக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த இணையதள கருத்தரங்கில் (Webinar), மன நலம்,
இறையியல் துறைகளில் புகழ் பெற்ற பல குருக்களும், துறவியரும் பங்கு பெற்றனர். இந்த கருத்தரங்கு நடைபெற்ற
வேளையில் நூற்றுக்கும் மேலான இணையதள முகவரிகள் மூலம் பல நூறு பேர் கேள்விகள் கேட்கவும், தங்கள்
கருத்துக்களை வெளியிடவும் இக்கருத்தரங்கு உதவியது என செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.