அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள்
பார்த்ததும் மழைவரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று
அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது.
வெளிவேடக்காரரேநிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க
அறிந்திருக்கும்போதுஇக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?
' நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? நீங்கள் உங்கள்
எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி
செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போகநடுவர் உங்களை
நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார்.
கடைசிக் காசுவரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறமாட்டீர்கள் என உங்களுக்குச்
சொல்கிறேன்.