ஸ்காட்லண்டில் கொர்னுபயா என்ற இடத்தின் சிற்றரசரான மவுருஸின் மகளாகப் பிறந்தவர் உர்சுலா.
இளவயதிலேயே, தன் வாழ்வை ஏசுவுக்கு அற்பனித்ததால் இவரைத் திருமணம் செய்ய விழைந்த பல இளவரசர்களின்
விருப்பங்களை நிராகரித்தார். ரோமையப் பேரரசன் ஒருவன் உர்சுலாவையும் ஏனைய இளம் பெண்களையும்
ராமையா வீரர்களுக்கு மனம் முடித்து வைக்கும் நோக்கத்தோடு, ஒரு கப்பலில் ஏற்றி சென்றார்.
கப்பல் புயலில் சிக்கியது. புயலால் திசை திருப்பப்பட்ட கப்பலைக் கடல் கொள்ளைக்காரர்கள்
தாக்கினர். உருசுலாவையும், மற்ற இளம் பெண்களையும் பலவந்தப்படுத்த முயன்றபோது, அவர்கள்
போராடி உயிர் துறந்தனர். இந்த மறைசாட்சியினரின் திருப்பண்டங்கள் கொலோன் நகரின் பல கோவில்களில்
பாதுகாக்கப்படுகின்றன.