2009-10-17 17:49:37

உலகளாவிய மறைபோதகப் பணி திருச்சபையின் விழாவில் அடிப்படையான செயலாக அமைய வேண்டும், அருட்திரு திமோத்தி


அக்.17,2009 உலகளாவிய மறைபோதகப் பணி திருச்சபையின் வாழ்வில் அடிப்படையான செயலாக அமைய வேண்டுமென திருப்பீட விசுவாசப்பரப்பு பேராயத்தின் பாப்பிறை மறைபோதக கழகப் பொதுச் செயலர் அருட்திரு திமோத்தி லெஹென் பாரட் கூறினார்.

இஞ்ஞாயிறன்று திருச்சபையில் 83வது உலக மறைபரப்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட அருட்திரு Barrett, பாப்பிறை மறைபோதக கழகம், மறைப்பணித் தளங்களில் புதிய ஆலயங்கள் கட்டுவதற்கும் குருத்துவ மாணவரையும் குருக்களையும் உருவாக்குவதற்கும் தேவையில் இருக்கும் சிறாருக்கு உதவுவதற்கும் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை விளக்கியுள்ளார்.

மக்களினத்தார் அதன் ஒளியில் நடப்பர் என்ற தலைப்பில் இவ்வாண்டு உலக மறைபரப்பு தினம் கடைபிடிக்கப்படுகின்றது







All the contents on this site are copyrighted ©.