2009-10-16 17:06:40

மேற்கத்திய உலகத்தின் நம்பிக்கைகளும் நடத்தைகளுமே உலகம் வாழ்வதற்கான ஒழுங்குமுறைகள் என்ற அவ்வுலகத்தின் எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும், செனகல் கர்தினால்


அக்16,2009 மேற்கத்திய உலகத்தின் நம்பிக்கைகளும் நடத்தைகளுமே உலகம் வாழ்வதற்கான ஒழுங்குமுறைகள் என்ற அவ்வுலகத்தின் எண்ணங்கள் அகற்றப்பட வேண்டுமென ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவை பிரதிநிதி ஒருவர் கூறினார்.

வத்திக்கானில் நடை பெற்று வரும் இப்பேரவையில் இவ்வாறு கூறிய ஆப்ரிக்காவின் செனகல் நாட்டு கர்தினால் Théodore-Adrien Sarr, ஒருவகையான கலாச்சார பேரரசு கோட்பாடு இடம் பெறுவதைச் சுட்டிக்காட்டினார்.

ஆப்ரிக்கக் கண்டத்திற்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் மீது வாழ்வுக்கு எதிரான கட்டுபாடுகள் விதிக்கப்படுவதாகவும், மேற்கத்திய உலகம் தங்களுக்கு உதவ விரும்பினால் தங்களுக்குப் பொருந்தாதது போல் தெரியும் கருத்துக்களை எங்கள் மீது திணிக்கக் கூடாது எனவும் கர்தினால் Sarr கூறினார்.

இந்தப் பேரவை அக்டோபர் 25ம் தேதி நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.