உலகின் குழந்தைகள் அனைவரும் இம்மாதம் 18 ம் தேதி ஞாயிறன்று உலகின் அமைதி மற்றும் ஐக்கியத்திற்கு ஒன்றிணைந்து ஜெபமாலை செபிக்க வேண்டும்
என வெனிசுவேலாவின் கத்தோலிக்கப் பொது நிலையினருக்கான தேசிய அவை அழைப்பு விடுத்துள்ளது.
அமைதியும் ஐக்கியமும் அதிகம் அதிகமாகத் தேவைப்படும் இன்றைய
உலகில் ஜெபத்தின் மூலம் விசுவாசத்தையும், விசுவாசம் மூலம் அன்பையும் அன்பின் வழி சேவையையும்
சேவை வழி அமைதியையும் பெற முடியும் என்பதால், இச்செபமாலை ஜெபித்தல் தினத்தைப் பரிந்துரைப்பதாக
இக்கத்தோலிக்கப் பொது நிலையினருக்கான தேசிய அவை அறிவித்துள்ளது. 10 லட்சம் குழந்தைகள்
ஜெபமாலையைச் செபித்தால், எத்தனையோ கொடைகள் உலகிற்கு வழங்கப்படும் என்ற புனித பாத்ரே பியோவின்
வார்த்தைகளையும் கோடிட்டுக் காட்டி, இம்மாதம் 18 ம் தேதி பத்து லட்சம் குழந்தைகள் உலகம் முழவதும் உலக அமைதிக்காகச்
செபிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர் வெனிசுவேலாவின் கத்தோலிக்கப் பொது
நிலையினருக்கான தேசிய அவையினர்.