2009-10-09 14:39:02

போதைப் பொருள் உற்பத்திக்கு மாற்று உற்பத்தி கையாளப்படும் நாடுகளில் அது தொடர்ந்து இடம் பெற வேண்டும், பேராயர் மிலியோரே


அக்.09,2009 போதைப் பொருள் கட்டுப்பாடு குறித்து ஐ.நா.பொது அவையின் 64வது அமர்வின் மூன்றாவது குழு கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் மிலியோரே, போதைப் பொருள் உற்பத்திக்கு மாற்று உற்பத்தி கையாளப்படும் நாடுகளில் அது தொடர்ந்து இடம் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

போதைப் பொருளுக்கு அடிமையாகி அதனால் துன்பப்பட்டு தற்சமயம் அதிலிருந்து வெளிவந்திருப்பவர்கள், இன்னும் அப்பழக்கத்திற்கு ஆளாகியிருப்போருக்கு நம்பிக்கையின் தூதுவர்களாகச் செயல்படுமாறும் பேராயர் பரிந்துரைத்தார்.

கடந்த ஆண்டில் போதைப் பொருளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக் குறைந்திருந்தது என்ற ஐ.நா.பொதுச் செயலரின் அறிக்கை ஆறுதல் தருவதாக இருக்கின்றது என்றும் உரையாற்றிய பேராயர் மிலியோரே, போதைப் பொருள் வியாபாரங்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதால் சட்டத்துக்குப் புறம்பேயான வியாபாரங்கள் தடை செய்யப்படுமாறும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.