2009-10-09 13:59:00

அக். 10. யார்க் நகர ஆயர் பவுலினுஸின் விழா.


584ம் ஆண்டு பிறந்து, ரோம் நகரில் துறவியாகி, பின்னர் திருத்தந்தை பெரிய கிறகரியால் இங்கிலாந்துக்கு மறைபோதகராக அனுப்பப்பட்டவர் இப்புனிதர். அங்கு கென்ட் நகரில் 24 ஆண்டுகள் சிறப்புப் பணியாற்றினார் புனித பவுலினுஸ். 625ல் கென்ட் நகர் ஆயரான இவர், நார்தும்பிரியா மன்னர் எட்வினையும் அவர் குடிமக்கள் பல ஆயிரக்கணக்கானோரையும் திருமுழுக்கு அளித்து திருமறைக்குத் திருப்பினார். 644ம் ஆண்டு காலமானார் புனித பவுலினுஸ்.








All the contents on this site are copyrighted ©.