அக். 08, 2009 சீனாவின் மக்கள் குடியரசு நிறுவப்பட்ட அறுபதாம் ஆண்டு நிறைவை அந்நாட்டு
மக்கள் கொண்டாடி வரும் வேளையில், ஷென்சென் நகரில் உள்ள பங்குத் தந்தை அருட்திரு ஹு கின்குவா அங்குள்ள கத்தோலிக்க இளைஞர்களுடன் செபம்,
பக்திப் பாடல்கள் வழியே இவ்வாண்டு விழாவைக் கொண்டாடினார்.
சிசொங் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட
இந்தக் கொண்டாட்டத்தில் 60 மெழுகு திரிகள் இதயத்தின் நடுவே சிலுவை என்ற வடிவத்தில் ஏற்றப்பட்டன. கடற்கரையில்
சூழ இருந்தவர்களையும் கவர்ந்த இந்தக் கொண்டாட்டத்தில் அண்மையில் வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி எனப்
பல இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட ஆசிய மக்களுக்கான சிறப்பு செபங்கள் மேற்கொள்ளப்பட்டன. "நாட்டின் தேசிய
நாள் கொண்டாட்டமும், நற்செய்தி பரப்புதலும்" என்ற கருத்தில் சென்ற மாதம் முதல் சீனாவின்
பல்வேறு மறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று
என பங்குத் தந்தை அருட்திரு ஹு கின்குவா தெரிவித்தார்.