2009-10-08 15:56:06

அடுத்த ஆண்டு திருத்தந்தை போர்த்துகல்லுக்கு திருப்பயணம் மேற்கொள்வார் - போர்த்துகல் ஆயர் பேரவை 


அக். 08, 2009 திருத்தந்தை 16 ம் பெனெடிக்ட் அடுத்த ஆண்டு போர்த்துகல்லுக்கு திருப்பயணம் மேற் கொண்டு, சிறப்பாக, பாத்திமா அன்னை திருத்தலத்திற்குச் செல்வார் எனப் போர்த்துகல் ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதத்தில் திருத்தந்தை போர்த்துகல்லுக்கு திருப்பயணம் மேற் கொள்வார் என்ற செய்தி அந்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக ஆயர் பேரவை கூறுகிறது.
திருத்தந்தை ஒரு திருப்பயணியாக, பாத்திமா செல்லும்போது, உலகில் உள்ள திருச்சபை முழுவதும் திருப்பயணம் மேற்கொள்கிறது, இதனால் பொர்த்துக்கலிலும் உலகத்திலும் விசுவாசம் இன்னும் ஆழப்படுத்தப்படும் என்றும், இந்தத் திருப்பயணத்தின் விவரங்கள் வருகிற நவம்பரில் உறுதியாக்கப்பட்டு வெளியாகும் என்றும் போர்த்துகல் ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.