சுடான் நாட்டில் அமைதியை உருவாக்க அமெரிக்க ஐக்கிய நாட்டின் நிர்வாகம்செயல்
பட வேண்டும் மதத்தலைவர்கள் அழைப்பு.
அக். 06, 2009. சுடான் நாட்டில் அமைதியை உருவாக்க அமெரிக்க ஐக்கிய நாட்டின் நிர்வாகம்
அற்பணத்துடன் செயல் பட வேண்டும் என 10 வெவ்வேறு மதப்பிரிவுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அலுவலகத்தின் அதிகாரி ஜோஷ்வா து பாய்ஸைச் சந்தித்த இத்தலைவர்கள் சூடானில் அமைதியை
ஏற்படுத்த அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமா முன்னின்று வழி நடத்த வேண்டும் என்றனர். சூடானில்
அமைதிக்கான அர்ப்பணத்திற்கு அழைப்பு விடுத்து 1410 கிறிஸ்தவ, யூத மற்றும் இஸ்லாமிய தலைவர்கள்
கையெழுத்திட்ட விண்ணப்பத்தையும் ஒபாமா அரசின் நிர்வாக அதிகாரிகள் வசம் சமர்பித்தனர் இம்மதப் பிரதிநிதிகள்.