2009-10-06 18:06:21

சிம்பாப்வே நாட்டில் வன்முறைகள் குறித்த உண்மைகள் எடுத்துரைக்கப்பட வேண்டியது அவசியம் என்றனர் ஆயர்கள். 


அக். 06, 2009. சிம்பாப்வே நாட்டில் வன்முறை, அடக்கி ஒடுக்கப்படுதல், சுரண்டல் போன்றவைகள் நிறுத்தப்பட வேண்டுமானால், அந்நாட்டின் வன்முறைகள் குறித்த உண்மைகள் எடுத்துரைக்கப்பட வேண்டியது அவசியம் என்றனர் அந்நாட்டு ஆயர்கள்.

சிம்பாப்வே மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் வன்முறை என்பது ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்கள் வழியாகவும் பாதிப்புக்கு காரணமானவர்கள் தங்கள் பாவங்களுக்கான பொறுப்பை ஏற்பதன் மூலமும் வெளி உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்றனர் ஆயர்கள்.
காயங்களைக் குணப்படுத்துவதில் மட்டுமல்ல, அதிகம் தேவைப்படும் ஒப்புரவைக் கொணர்வதற்கும் தங்களால் ஆன அனைத்தையும் ஆற்ற தலத் திருச்சபை தயாராக உள்ளது என ஆயர்கள் கூறினர்.







All the contents on this site are copyrighted ©.