ஆப்ரிக்காவுக்காகத் தன்னோடு சேர்ந்து செபமாலை செபிப்பதற்கு உரோம் பல்கலைகழக மாணவர்களுக்கு
திருத்தந்தை அழைப்பு
அக்.05,2009 ஆப்ரிக்காவோடும் ஆப்ரிக்காவுக்காகவும் தன்னோடு சேர்ந்து செபமாலை செபிப்பதற்கு
உரோம் பல்கலைகழக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
ஞாயிறு மூவேளை
செப உரைக்குப் பின்னர் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இதன்மூலம் மாணவர்கள் தங்கள்
மேய்ப்பர்களோடும் தங்கள் நகரின் பிற மக்களோடும் சேர்ந்து செபிப்பதற்கு இயலும் என்று கூறினார்.
வருகிற
ஞாயிறன்று வத்திக்கானிலுள்ள பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் பேரவைத் தந்தையர்களுடன்
சேர்ந்து திருத்தந்தை செபமாலை செபிக்கவுள்ளார்.
இச்செபம் பற்றி விளக்கிய பேருட்திரு
லொரென்சோ லெயூட்சி, இச்செப வேளையில் விண்கோள் தொடர்பு அமைப்பு மூலம் மாணவர்கள் திருத்தந்தையைக்
காண்பார்கள். திருத்தந்தையும் செபிக்கும் மாணவர்களைப் பார்ப்பார் என்று கூறினார்