பிலிப்பைன்ஸில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காரித்தாஸ் உதவி
அக்.03,2009 பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலாவில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான
நிவாரண உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அந்நாட்டு காரித்தாஸ்
நிறுவனம் தனது பங்காக மூன்று கோடி பேசோஸ் பணத்தை வழங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர்
26ம் தேதி தாக்கிய கெட்சானா வெள்ளப் பெருக்கில் தங்கள் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான
நிவாரண உதவிகளை காரித்தாஸ் நிறுவனம் வழங்கி வருவதாக அருட்சகோதரி ரோஸ்ஆன் மலிலின் கூறினார்.
இந்த
வெள்ளப் பெருக்கில் குறைந்தது 4, 50 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1 50 000
பேர் வீடுகளை இழந்துள்ளனர்.