காஜாவில் ஒரு வருடத்திற்குள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை மூன்று
மடங்காகியுள்ளது
அக்.03,2009 காஜாவில் ஒரு வருடத்திற்குள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை
மூன்று மடங்காகி இருப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் ஐ.நா. நிறுவனத் தலைவர் ஜான் ஜிங்
கூறினார்.
இவ்வாண்டில் மூன்று இலட்சம் பேர் அதாவது ஐந்து பேருக்கு ஒருவர் என
கடும் வறுமையில் வாழ்வதாக ஜிங் மேலும் கூறினார்.
2007ம் ஆண்டில் ஹமாஸ் குழு காஜா
பகுதியை வன்முறையாய்க் கைப்பற்றியதையடுத்து இஸ்ரேல் விதித்த எல்லைக் கட்டுப்பாட்டினால்
தற்போது அப்பகுதியின் நிலைமை சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கின்றது என்று அவர் கூறினார்.
இவ்வாண்டுத்
தொடக்கத்தில் ஒரு இலட்சம் பேருக்கு ஐ.நா. உதவி செய்ய வேண்டியிருந்தது, தற்போது மேலும்
2 இலட்சம் பேருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கின்றது என்றும் ஜான் ஜிங் கூறினார்.