ஸ்பெயின் நாட்டின் பிரபுத்துவக் குடும்பத்தில்
பிறந்த இப்புனிதர், திருத்தந்தை 6ம் அலக்ஸாண்டர் மற்றும் மன்னர் 5ம் சார்லசின் உறவினரும்
ஆவார். 19ம் வயதிலேயே திருமணம் புரிந்து 8 குழந்தைகளுக்குத் தந்தையான இவர், அரசவையில்
பெரிய பதவியில் இருந்தபோதே உலக இன்பங்களைத் துறந்து இயேசு சபையில் இணைந்து குருவானார்.
இயேசுசபையின் மூன்றாம் அதிபராகவும் பதவியிலிருந்த புனித பிரான்சிஸ் போர்ஜியா, பல்வேறு
நாடுகளுக்கும் மறைப்பணியாளர்களை அனுப்புவதில் ஆர்வம் காட்டினார்.