தரமான கல்வியைக் கொணர்ந்ததற்காக, கத்தோலிக்கமதத்திற்கு
பாராட்டு – இந்திய அமைச்சர்.
இந்தியாவின் ஏழைகளுக்குத் தரமான கல்வியைக் கொணர்ந்ததற்காக, கத்தோலிக்க மதத்தைப் பாராட்டுவதாகவும்,
கல்வி தரத்தை உயர்த்துவதற்கான அரசின் முயற்சிகளில் கத்தோலிக்க மதம் தன் பங்கீட்டை வழங்க
வேண்டும் எனவும் கூறினார் இந்தியக் கல்வி அமைச்சர் கபில் சிபல். "இணக்க வாழ்வுடைய இந்தியா"
என்ற தலைப்பில் இந்திய கத்தோலிக்கத் துறவரத்தாரின் தேசிய அவை, கடந்த ஞாயிறு முதல் வரும்
வெள்ளி வரை நடத்தும் 6 நாட்கள் கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய அமைச்சர், கல்வி
மேம்பாட்டிற்காக பணிபுரியும் கத்தோலிக்க மதத்தினரைபோல் சேவை மனமுடையோர் மேலும் அதிகம்
பேர் தேவைப் படுகிறார்கள் என்றார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சிறுபான்மை மதத்தவர்களின்
கல்வி நிறுவனங்களைப் பாதிக்கும் என்ற அச்சம் வேண்டம் என்றும் கூறினார் அமைச்சர் கபில்
சிபல்.