2009-09-29 17:26:35

உலக சமூகத் தொடர்பு தினத்திற்கான மையக் கருத்தினை வெளியிட்டுள்ளது திருப்பீடம் 


"கணணி மயமான உலகில் குருவும், மறைபணியும்: இறைவார்த்தைப் பணியில் புதிய தகவல் தொடர்புசாதனம்." என்ற தலைப்பில் 2010 ம் ஆண்டின் உலக சமூகத் தொடர்பு தினத்திற்கான மையக் கருத்தினை வெளியிட்டுள்ளது திருப்பீடம். இறை வார்த்தையை எடுத்துரைப்பதில் இன்றைய புதிய நவீனத் தொழில் நுட்பங்களை ஒரு நல்ல பலம் நிறைந்த உதவியாக நோக்க வேண்டும் எனக் கூறும் இச்செய்தி, இன்றைய புதிய கணனித் தொழில் நுட்பக் கலாச்சாரத்தில் எதிர்நோக்கப்படும் சவால்களைச் சமாளிப்பதற்கான ஊக்கத்தையும் குருக்களுக்கு வழங்குவதாகத் தெரிவிக்கிறது. வரும் ஆண்டின் சமூகத்தொடர்பு நாளுக்கான மையக் கருத்து கிறிஸ்துவை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல, புதிய தொழில் நுட்பங்களின் உதவி குறித்தும் விவரிக்கிறது.







All the contents on this site are copyrighted ©.