செப். 24, 2009 வருகிற சனிக்கிழமை செக் குடியரசு நாட்டிற்குத் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட்
பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு அந்நாட்டுத் திருச்சபையைப் பற்றிய புள்ளி விவரங்களை வத்திக்கான்
வெளியிட்டுள்ளது. ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தொகையை கொண்டுள்ள அந்நாட்டில் 32 விழுக்காடு
கத்தோலிக்கர்கள். மறைந்த திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் மும்முறை பயணம் மேற்கொண்ட இந்நாட்டிற்குத்
தான் முதன் முறையாகச் செல்லும் போது, அந்நாட்டின் விசுவாசத்தை இன்னும் ஆழப்படுத்த விரும்புவதாகவும்,
சென்ற நூற்றாண்டில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்த அந்நாட்டில் அமைதி அதிகமாக, தான்
வேண்டிவருவதாகவும் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் அண்மையில் தான் வழங்கிய மூவேளை செப
உரையில் குறிப்பிட்டார்.