இத்தாலியின் வெனிஸ் நகரைச் சேர்ந்த பெனடிக்டன் துறவி புனித ஜெரார்டு சாக்ரெதோ, ஹங்கேரி
மன்னர் புனித ஸ்டீபனின் விண்ணப்பத்தை ஏற்று ஹங்கேரியில் ஆயராக மறைப்பணியாற்றினார். இளவரசர்
புனித எமெரிக்கின் ஆசிரியராகவும் இருந்தார். 1046ம் ஆண்டு, விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட
இவரின் உடல் தனுபே ஆற்றில் எறியப்பட்டது.