திருத்தந்தை அறிவித்த குருக்களின் ஆண்டு என்ற மையப்பொருளால் உந்தப்பட்டு, கேரளாவில்,
வடனப்பள்ளி புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் பங்குத் தந்தை டேவிஸ் சிரமெல் (Davis Chiramel) தனது சிறுநீரகங்களில் ஒன்றை,
கோபிநாத் என்ற ஒரு ஏழை இந்துவுக்குத் தானமாக வழங்க முன் வந்துள்ளார்.
இந்த தானம்
தொடர்பான ஒரு சில பரிசோதனைகளை மேற்கொள்ள அவர் மருத்துவ மனையில் இருந்த போது, திருத்தந்தை
குருக்கள் ஆண்டை அறிவித்தது, தன்னை இன்னும் பிறருக்கு அற்பணிக்கும் வாழ்வை மேற்கொள்ளத்
தூண்டுதலாய் இருந்ததென அருட்தந்தை சிரமெல் கூறினார்.
முன் பின் தெரியாத ஒரு இந்துவுக்குத்
தான் செய்யப்போகும் இந்த தானம், கிறிஸ்து தினமும் தன்னையே வழங்கும் கல்வாரிப் பலியில்
தனக்குக் கிடைத்துள்ள ஒரு பங்கு என்று அவர் கூறினார். வருகிற 30 ஆம் தேதி கொச்சியில்
உள்ள லேக் ஷோர் மருத்துவ மனையில் இந்த சிறுநீரக மாற்று சிகிச்சை நடைபெற உள்ளதென செய்திகுறிப்பு
ஒன்று கூறுகிறது.