செப். 22. 'திருநற்கருணை : கிறிஸ்துவுடனும் ஒருவர் ஒருவருடனும் ஆன ஐக்கியம்' என்ற தலைப்பில்
2010ம் ஆண்டு அயர்லாந்தில் இடம்பெற உள்ள 50வது சர்வதேச நற்கருணை மாநாட்டிற்கான தயாரிப்புகள்
தற்போதே துவங்கியுள்ளதாக அறிவித்தார் டப்ளின் பேராயர் தியார்முத் மார்ட்டின்.
2012ம்
ஆண்டு ஜூன் மாதம் 10 முதல் 17 வரை டப்ளினில் இடம்பெறவுள்ள இச்சர்வதேச கருத்தரங்கு, இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டை சிறப்பிப்பதாகவும் இருக்கும் என்றார்
அவர்.