2009-09-21 10:52:52

கர்நாடகாவில் கோவில் தாக்குதல் குறித்த விவரங்களுக்கு விண்ணப்பித்துள்ளது மனித உரிமைகள் அவை


செப். 19, 2009 இம்மாதம் 10 ஆம் தேதி பெங்களூர் புறநகர்ப் பகுதி ஹெப்பகோடி புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் கோவில் தாக்கப்பட்டது குறித்து கர்நாடக மாநில உள்துறைச் செயலர், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது அம்மாநில மனித உரிமைகள் அவை.
புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் கோவிலின் இயேசு மற்றும் மாதா திரு உருவச் சிலைகள் சேதமாக்கப்பட்டது குறித்து நடத்தப்பட்டுள்ள முழு விசாரணைகள் குறித்த அறிக்கையை அரசிடம் இருந்து வேண்டியுள்ள இம்மனித உரிமைகள் அவை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 க்கும் செப்டம்பர் 21 க்கும் இடையே, கர்நாடகாவில் வழிபாட்டுத் தலங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த முழு விவரங்களுக்கும் விண்ணப்பித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.