இத்தாலியின் பெனெவந்தம் நகரின் ஆயராக இருந்த புனித ஜனுவாரியுஸ், பேரரசர் தியொக்ளிசியன்
காலத்தில் திருமறைக்காக துன்பங்களை அனுபவித்து மறைசாட்சியாக உயிரிழந்தார். இவர் 305ம்
ஆண்டு கொலையுண்டபோது பிடிக்கப்பட்ட அவரின் இரத்தம் இன்றும் இரு குப்பிகளில் அடைக்கப்பட்டு
காப்பாற்றப்பட்டு வருகிறது. இவ்வுறைந்த இரத்தம் சிலவேளைகளில், இவரின் திருவிழா நாளில்
கருஞ்சிவப்பாக திரவ வடிவில் மாறி, அன்று சிந்தியது போல் கொதிப்பது பெரும் புதுமையாகும்.