2009-09-18 16:13:42

க்யூபா அரசு சிறைகளில் திருப்பலி நிறைவேற்ற அனுமதி 


செப். 19, 2009 சிறைச்சாலைகளில் திருப்பலி நிறைவேற்றப்படுவதைக் கடந்த 50 ஆண்டளவாய்த் தடுத்து வந்த க்யூபா அரசு இந்த வாரம் முதல் சிறைகளில் திருப்பலி நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளது.

க்யூபா ஆயர்கள் பேரவையின் செயலர் அருட்தந்தை ஹோசே பெலிக்ஸ் பியரெஸ் (Jose Felix Perez) பல ஆண்டுகளாக, க்யூபா திருச்சபை அரசுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகளுக்குத் தகுந்த பலன் கிடைத்துள்ளது என குறிப்பிட்டார்.
கடந்த 50 ஆண்டுகளாக, வருடத்தில் ஒரு சில பெருவிழக்களுக்கு மட்டுமே திருப்பலி நிகழ்த்த அனுமதி இருந்ததாகவும், இப்போது வாரம் ஒரு முறை சிறைச் சாலைகளில் திருப்பலி நிகழ்த்த அனுமதி கிடைத்துள்ளது மிகவும் வரவேற்கதக்கது எனவும் அருட்தந்தை பியரெஸ் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.