"நாசரேத்தூர் இயேசு" இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும்.
செப். 18, 2009. திருப்பீட பேச்சாளர் பெடெரிகோ லொம்பார்டி (Federico Lombardi) திருத்தந்தை
16 ஆம் பெனெடிக்ட் எழுதி வரும் "நாசரேத்தூர் இயேசு" என்ற நூலின் இரண்டாம் பாகம் அடுத்த
ஆண்டு வெளிவரும் என்று கூறினார். திருத்தந்தையால் எழுதப்பட்ட "நாசரேத்தூர் இயேசு"
என்ற நூலின் முதல் பகுதி 2007ஆம் ஆண்டு வெளிவந்து மக்களிடையே சிறப்பு பெற்றது என்பது
குறிப்பிட தக்கது. 448 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் இயேசுவின் திருமுழுக்கு, உருமாற்றம்
போன்ற நிகழ்வுகள் பற்றிய ஆழமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. கடந்த இரு ஆண்டுகளாய் "நாசரேத்தூர்
இயேசு" இரண்டாம் பாகத்தை எழுதி வருகிறார் திருத்தந்தை. இந்த நூலில் இயேசுவின் பிறப்பு,
வளர்ப்பு, பாடுகள், உயிர்ப்பு ஆகிய மறை உண்மைகள் ஆழமாக விவாதிக்கப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது.