2009-09-17 15:17:33

கல்வியை முன்னேற்றுவேன் - வியட்நாம் ஆயர். 


செப். 18, 2009. வியட்நாம் தாய் பின் (Thai Binh) என்ற மறைமாவட்டத்தின் ஆயராக பியேர் ங்குயென் வான் தே (Pierre Nguyen Van De) அண்மையில் பொறுப்பேற்றார். சலேசிய சபைத் துறவியான ஆயர் வேன் தே கல்வியை வளர்ப்பதன் மூலம் இளையத் தலைமுறையினரின் வாழ்க்கை தரத்தையும், நன்நெறிகளையும் உயர்த்த தாம் பாடுபடப்போவதாகத் தெரிவித்தார்.
அறுபத்து மூன்று வயது நிரம்பிய ஆயர் கல்விக் கூடங்கள் எழுப்புவதும், ஏழைகள் வாழ்வதற்கு இல்லங்கள் கட்டுவதும் தன் மறை மாவட்டத்தின் முக்கிய பணியாக இருக்கும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.