செப். 17, 2009. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரின் பேராலயத்தில் திங்களன்று 5000 இளையோர்
அந்நகரின் பேராயர் கர்தினால் அன்டோனியோ ரூக்கொவிடம் சிலுவைகளைப் பெற்றுக்கொண்டனர்.
2011
ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாட்ரிட் நகரில் நடைபெற இருக்கும் உலக இளையோர் தினத்திற்கு
ஒரு முன்னேற்பாடாக இந்த திரு நிகழ்வு அமைகிறது என கர்தினால் அன்டோனியோ ரூக்கொ கூறினார். சிலுவை
அடையாளம் பலர் மனதில் சங்கடங்களை உருவாக்கும் ஒரு அடையாளம் என்றாலும், சிலுவையின் உள்ளார்ந்த
உண்மைகளை உணர்பவர்களுக்கு அது ஆற்றல் மிக்க அடையாளமாகும் என்றும், இன்றைய உலகில் பல்வேறு
வழிகளில் அலைந்து திரியும் இளையோருக்கு சிலுவையில் தொங்கும் இயேசுவும், சிலுவையின் அடியில்
நின்ற தாய் மரியாவும் பாடங்களாக அமைய வேண்டும் எனவும் கர்தினால் அன்டோனியோ ரூக்கொ கூறினார்.