அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான
மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற
தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ″ அம்மா, இவரே உம் மகன் ″ என்றார். பின்னர்
தம் சீடரிடம், ″ இவரே உம் தாய்″ என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று
ஆதரவு அளித்து வந்தார்