2009-09-14 13:57:12

அயர்லாந்தில் அடைக்கலம் தேடுவோருக்கு அனுமதி வழங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கப்படுவது குறித்து இயேசு சபை அதிபர் கவலை


செப்.14,2009 அயர்லாந்தில் அடைக்கலம் தேடுவோருக்கு அனுமதி வழங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கப்படுவது குறித்த கவலையை வெளியிட்டுள்ளார் இயேசு சபை அதிபர் அருட்திரு அடோல்ப் நிக்கோலாஸ்.

இயேசு சபையின் அகதிகளுக்கான அயர்லாந்து அமைப்பின் ஆண்டறிக்கையில் இவ்வாறு தனது கவலையை தெரிவித்துள்ள அருட்திரு நிக்கோலாஸ், அகதிகளை வரவேற்கும் அயர்லாந்து மக்களின் நல்லெண்ணெத்தைப் பாராட்டும் அதேவேளை அகதிகளை ஏற்பதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

காத்திருக்கும் இக்காலத்தில் அகதிகள் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது என்றும் கூறும் அவர், பல குடியேற்றதாரர் வாழும் பகுதியில் வெகு காலம் வாழ்ந்துள்ளதால் அவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை உணர முடிகின்றது என்று கூறியுள்ளார்.

ஸ்பானியரான இயேசு சபை அதிபர் அருட்திரு அடோல்ப் நிக்கோலாஸ் பல ஆண்டுகள் டோக்கியோவில் மறைப்பணியாற்றியவர்.



 








All the contents on this site are copyrighted ©.