20 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ' ஏழைகளே, நீங்கள்
பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.21 இப்பொழுது பட்டினியாய்
இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே,
நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.22 மானிடமகன்
பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து
தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.23 அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்;
ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும்
இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.24 ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக்
கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.25 இப்போது உண்டு கொழுந்திருப்போரே,
ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே,
ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.26 மக்கள் எல்லாரும்
உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும்
போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.