அனைவரும் அமைதியின் தூதுவர்களாகவும் அமைதியை அறிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்,
கிராக்கோவ் பேராயர்
செப்.07,2009. சர்வதேச அமைதி கருத்தரங்கில் இஞ்ஞாயிறன்று திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய
கிராக்கோவ் பேராயர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ஜிவிஷ், பிரச்சனைகள் நிறைந்த இவ்வுலகில் நாம்
அனைவரும் அமைதியின் தூதுவர்களாகவும் அமைதியை அறிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று
கூறினார்.
அமைதிக்காக அயராது உழைத்த மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பவுலின் நகரமான
இந்த கிராக்கோவிலிருந்து இந்த உறுதி மொழியை எடுப்போம் என்றும் கர்தினால் கூறினார்.
உயிர்த்த
இயேசு நமக்கு வழங்கிய முதல் கொடை அமைதி, இந்த அமைதியை கட்டி எழுப்புவதற்கு நாம் அனைவரும்
ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். உரோம் சான் எஜிதியோ பக்த
அமைப்பால் நடத்தப்பட்டு வரும் இவ்வுலகக் கருத்தரங்கு இச்செவ்வாயன்று நிறைவு பெறும்.