செப்.04,2009 ஜிம்பாபுவேயிலிருந்து தென்னாப்ரிக்காவில் புகலிடம் தேடும் மக்களுக்கு அரசும்
பிற சேவை நிறுவனங்களும் உதவ முன்வர வேண்டுமென அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கப்
பிரதிநிதிக் குழு கருத்து தெரிவித்துள்ளது.
இந்த உதவிகள் இல்லையெனில் இந்த அகதிகள்
அதிகம் துன்பப்படுவர் என்றும் இவர்களில் அதிகம் துன்பத்திற்கு ஆளாவது பெண்களும் சிறுவர்களும்தாம்
என்றும் கூறப்படுகிறது. ஜிம்பாபுவேயில் நிகழும் கொடுமைகளைத் தாங்க முடியாமல் இந்த
அகதிகள் தென்னாப்ரிக்காவிற்குத் தப்பிச் செல்கின்றனர். ஆனால் தென்னாப்ரிக்காவிலும் இவர்கள்
நிலை கவலைக்கிடமாக உள்ளது என இந்தக் குழுவின் அங்கத்தினர்கள் கூறுகின்றனர்.