செப்.04,2009 ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க திரைப்பட இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்ஸேஸி
ஜப்பானில் உயிர்துறந்த மறை சாட்சிகளைப் பற்றியதொரு திரைப் படத்தை இயக்கி வருகிறார்.
அடுத்த
ஆண்டு திரைக்கு வரும் இந்தப்படம் ஷுசகு எண்டோ என்ற ஒரு கத்தோலிக்க எழுத்தாளர் படைத்த
சின்மொகு என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படுகிறது. சின்மொகு என்ற சொல்லுக்கு நிசப்தம் என்று
பொருள்.
என்டோவின் நாவல்கள் கிழக்கு நாட்டு கலாச்சாரத்தில் கிறிஸ்தவம் வேரூன்றுவதில்
ஏற்படும் சிக்கல்களைச் சித்தரிக்கின்றன. என்டோவின் சின்மொகு என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள
200 ஜப்பானிய மறைசாட்சியினர் சென்ற ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் வத்திக்கானில் புனிதர் பட்டம் பெற்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.