2009-09-04 16:11:13

கிறிஸ்து ஒற்றுமையை வளர்க்கும் வழி திருத்தந்தை 


செப்.03,2009. மேலை நாடுகளும் கீழை நாடுகளும் தரும் ஆன்மீகம் கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்க்கப் பெரிதும் உதவும் என்று திருத்தந்தை

16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.



உரோமையில் கத்தோலிக்கரும் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களும் சேர்ந்து நடத்தும் கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் திருத்தந்தை இதனைத் தெரிவித்தார்.



புனித அகுஸ்தீன் பின்பற்றிய கிழக்கு மற்றும் மேற்குப் பாரம்பரியங்கள் கிறிஸ்துவ இறையியலையும் ஆன்மீகத்தையும் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் என்றும் அச்செய்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.



இச்சனிக்கிழமை நிறைவடையும் இந்த மூன்று நாள் கருத்தரங்கிற்கானத் திருத்தந்தையின் இச்செய்தி, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவரான கர்தினால் வால்டர் காஸ்பர் அவர்களின் பெயரிட்டு அனுப்பப்பட்டுள்ளது.
1992ல் ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய கருத்தரங்குகள், இத்தாலி, கிரீஸ் ஆகிய இரு நாடுகளில் மாறி மாறி நடத்தப்படுகின்றன.







All the contents on this site are copyrighted ©.