இலங்கையில் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து
மனித உரிமை ஆர்வலர்கள் கவலை
செப்.04,2009 மேலும், இலங்கையில் மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் திஸ்ஸநாயகத்திற்கு
20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து கத்தோலிக்க குருக்கள் உட்பட மனித
உரிமை ஆர்வலர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
எல்லாத் தரப்புகளின் உண்மையை
வெளிப்படுத்துவதற்கு உறுதி கொண்டுள்ள நிருபர்கள் தேவைப்படும் இந்நேரத்தில், எதிர்பாராத
விதமாக இந்த தீர்ப்பு நீதிமன்றத்திலிருந்து வெளிவந்துள்ளது என்று அருள்திரு மரிமுத்துப்பிள்ளை
சதிவேல் தனது அதிர்ச்சியை தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்பட்ட
போது அவ்வளாகத்தில், கிறிஸ்தவ குருக்கள் உட்பட சுமார் 50 மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள்
எதிர்ப்பைத் தெரிவித்தனர்.